அமுதசுரபி

'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி

Wednesday, June 01, 2005

வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி


கரு: பெண்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், சிக்கல்களை எதிர்கொள்ளும் வலிமை, புதிய சிந்தனை ஆகியவற்றைக் கருவாகக் கொண்டிருக்க வேண்டும்.

2005 ஜூன் முதல் 2006 மே வரை மாதம்தோறும் ஒரு சிறுகதை, முத்திரைக் கதை யாகத் தேர்வுபெற்று அமுதசுரபியில் வெளியாகும். கதைகளை அந்தந்த மாதத்தின் 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கதைகள், அமுதசுரபியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது. தேர்வுபெறும் ஒவ்வொரு கதைக்கும் ரூ.1,000 பரிசு வழங்கப்படும்.

அனுப்பவேண்டிய முகவரி : அமுதசுரபி, ஏ-7, இரண்டாம் அவென்யு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600102.
மின்னஞ்சலில் அனுப்புவோர், amudhasurabi@shriram.com முகவரிக்கு அனுப்பலாம்.

0 Comments:

Post a Comment

<< Home